Friday, February 2, 2018

நாள்தோறும் கவிதைதனை நானெழுத முயன்றாலும்


நாள்தோறும் கவிதைதனை
நானெழுத முயன்றாலும்
வாள்போலும் முதுகுவலி
வாட்டிடவே அயின்றாலும்
தோள்கொடுத்து காக்கின்றாள்
தூயத்தமிழ் அன்னையவள்
தாள்தொட்டு தொழுகின்றேன்
தவறாமல் எழுதுகின்றேன்


புலவர் சா இராமாநுசம்

4 comments :

  1. இயன்றதை எழுதுங்கள் ஐயா.

    ReplyDelete
  2. உங்கள் தமிழ் ஆர்வம் உங்களை எழுத வைக்கிறது

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!

    வலியும் வதைக்க வரைந்தாலும் பாடல்!
    பொலிவாய் இருந்தது பூத்து!

    உடல் நலமின்மையிலும் உங்கள் ஆர்வத்தினை மெச்சுகின்றேன்!
    நலம் பேணுங்கள் ஐயா!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. முதலில் உடல்நலம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...