Thursday, February 8, 2018

நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!


நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


புலவர்  சா இராமாநுசம்

6 comments :

  1. உடன்பாடு. பொதுவாகத்தானே சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  2. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை ஐயா.

    ReplyDelete
  3. புரிந்தது ஐயா...!
    நிகழ் காலத்தை அருமையாக
    வடிவமைத்திருக்கிறீர் ஐயா.

    ReplyDelete
  4. கவிதையில் சொல்வது புரிகிறது..

    ReplyDelete
  5. Useful article, thank you for sharing the article!!!

    Website: blogcothebanchuabiet.com chia sẻ những câu nói mỉa mai người khác hay stt một mình vẫn ổn và giải thích hiện tượng chim sẻ bay vào nhà là điềm gì.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...