Showing posts with label அடிமை அரசின் அவலம் உண்மை தன்மை கவிதை. Show all posts
Showing posts with label அடிமை அரசின் அவலம் உண்மை தன்மை கவிதை. Show all posts

Sunday, September 3, 2017

ஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே!



ஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே
ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே
நாட்டுமக்கள் அனைவருமே அறிந்து கொள்ள
நாட்களுமே ஒவ்வொன்றாய் நகர்ந்து தள்ள
காட்டுகின்றார் அடிமையென ஆள்வோர் சுகமே
காத்திடவே வெட்கமது இன்றி அகமே
ஓட்டுதனைக் கேட்பதற்கு வருவார் அன்றே
உணர்த்திடுவோம் மறவாது உணர நன்றே


புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...