Tuesday, November 15, 2011

குழந்தைகள் தினவிழாப் பாடல்



சின்னஞ் சிறுக் குழவி
  சிங்கார இளங் குழவி
கன்னம் குழி விழவும்
  களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முக மாகும்
  அன்றலரும் தாமரை போல்
தன்னை மறந்த தவளும்
   தாலாட்டு பாடு வளாம்

பூவின் இதழ் போல
   பொக்கை வாய் விரிய
நாவின் சுவை அறிய
   நறுந் தேனை தடவிட
பாவின் பண் போல
   பைந்தமிழ் சுவை போல
காவின் எழில் போல
   களிப்பாயே தேன் சுவையில்

கண்ணே நீ உறங்கு
  கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ் கின்ற
  வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
  வரைந்த நல் ஓவியமே
மண்ணை வள மாக்கும்
   மழைத் துளியே நீயுறங்கு

கொஞ்சும் மழலைக் கோர்
   குழல் இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
    பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னை மனம்
    அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
   நீவளரும் வரை யவளே

       புலவர் சா இராமாநுசம்

 

33 comments :

  1. கொஞ்சும் மழலைக் கோர்
    குழல் இசையும் ஈடாமோ// எந்த இசைக்கும் ஈடாகாது..

    ReplyDelete
  2. வேடந்தாங்கல் - கருன் *!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. நல்லதொரு தாலாட்டு குழந்தைகள் தினத்தில்...வாழ்த்துக்கள் அய்யா...

    ReplyDelete
  4. ரெவெரி said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. குழந்தையை மடியில் போட்டு பாடியது போல் உள்ளது ஐயா இந்த பாடல் ,அருமை
    த.ம 3

    ReplyDelete
  6. //அன்னை முக மாகும்
    அன்றலரும் தாமரை போல்
    தன்னை மறந்த தவளும்
    தாலாட்டு பாடு வளாம்//
    ஆமாம் அய்யா! ஒவ்வொரு தாயின் அனுபவம்,நன்று.

    ReplyDelete
  7. M.R said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. shanmugavel said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. சென்னை பித்தன் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. அழகான கவிதை... வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  11. நல்ல பதிவு ஐயா! தமிழர் சிந்தனை களத்தில் உங்கள் பணிகள் மிகவும் அருமையானது, தமிழை மக்கள் மறந்து வரும் சூழலில் ஆங்கில மோகம் ஆட்டி படைக்கும் நேரத்தில், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று நினைக்கும் காலத்தில் தமிழை அமுதாய் கவிதையாய் வடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மழலையை மடியேந்திய காலத்தை மனக்கண் முன் மீண்டும் கொண்டுவந்து மகிழ்ந்தேன். கண்ணே கற்கண்டே என்பதோடு மண்ணை வளமாக்க வந்த மழைத்துளியே என்ற தாலாட்டில் தன்னலமற்ற பொதுநலம் படிந்திருப்பதைக் கண்டு வியந்தேன். அற்புதத் தாலாட்டுப் பாடிய ஐயாவுக்கு என் வணக்கம்.

    ReplyDelete
  13. அழகான கவிவரிகள்

    ReplyDelete
  14. மாய உலகம் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. PUTHIYATHENRAL said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கீதா said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. K.s.s.Rajh said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. நல்லபதிவு வாழ்த்துக்கள், தமிழர் சிந்தனை களத்தில் நல்ல பல பதிவுகளை வழங்கி உள்ளீர்கள். நன்றி தோழரே.

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
    http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html

    ReplyDelete
  19. அருமை... அருமை... குழந்தையின் மழலைபோலவே இனித்தது...

    ReplyDelete
  20. தங்கள் படைப்புகளை பதிவர் தென்ற-ல் பயன்படுத்திக்கொள்ள விருப்பம். தங்களுக்கு...
    thambaramanbu@gmail.com

    ReplyDelete
  21. PUTHIYATHENRAL said

    அன்பரே!

    தங்கள் வலைவழி வந்து,படித்து
    பாராட்டி இருக்கிறேன்.
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. குடந்தை அன்புமணி

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. குடந்தை அன்புமணி said

    ஐயா!

    கரும்பு தின்ன கூலியா...?

    தாங்கள் என் வலைவழி வருகின்ற எல்லா
    கவிதைகளையும் என்பெயரோடு தாராளமாகப் பயன் படுத்திக்
    கொள்ளுங்கள்.
    எந்த மறுப்பும் இல்லை!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. தமிழ்வாசி - Prakash said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. அருமையான பாடல் ஐயா ..

    ReplyDelete
  26. முடிந்தவர்கள் யாராவது ஒரு ராகமிட்டுப் பாடினால் மிக மிக அருமையானதொரு தாலாட்டு !

    ReplyDelete
  27. குழவி.. குழவி.. என்று நீங்கள் குழைந்தது நன்றாகவே இருக்கிறது.. நீங்களும் ஒரு குழவிதானே ஐயா எங்களுக்கு..!!

    ReplyDelete
  28. நேரமிருந்தால் இங்கேயும் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன்..


    எனது வலையில்

    வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

    உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  29. ”””கண்ணே நீ உறங்கு
    கற்கண்டே நீ உறங்கு
    விண்ணில் தவழ் கின்ற
    வெண்மதியே நீ உறங்கு
    வண்ண மங்கா மல்
    வரைந்த நல் ஓவியமே
    மண்ணை வள மாக்கும்
    மழைத் துளியே நீயுறங்கு”””

    தாலாட்டின் தனித்துவத்தை
    தீந்தமிழில் தந்த விதம்
    அருமை அய்யா.
    மீண்டும் குழந்தையானேன்

    ReplyDelete
  30. பைந்தமிழ் சுவை போல
    காவின் எழில் போல
    களிப்பாயே தேன் சுவையில்/

    தித்திக்கும் தீஞ்சுவைப்பாடலால்
    எழிலாய மழலைரை வாழ்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  31. அருமையான வரிகளால் சிறுவர் தினப் பாடல் -
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...

    ReplyDelete
  32. குழந்தைகளின் மழலையைப்போலவே அழகுக்கவிதை.
    பாராட்டுக்கள். அன்புடன் vgk

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...