Saturday, January 28, 2012

இலையதை தடுத்திடும் எண்ணமே!



கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
    கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
   தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
    ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
    நிம்மதி ஏற்பட செய்வீரா?

பட்டப் பகலில் வங்கியிலே-பெரும்
    பணமே கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!


வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
     வாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

             புலவர் சா இராமாநுசம்
  








38 comments :

  1. நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
    நீங்கா கறையே கொள்வீரே!

    கவிதை அருமை ஜயா

    ReplyDelete
  2. சட்டம் ஒழுங்கை சீர்குழைக்கும்
    செயல்களை நீங்கள்
    பட்டியலிட்டது யதார்த்தம் ஐயா..
    இன்றைய சூழ்நிலை இதுதான்...
    அரசு வேடிக்கை பார்ப்பதை விடுத்து
    ஒழுங்கு நடவடிக்க எடுக்கவேண்டும்
    என்ற இடித்துரைக் கவிதை
    அருமை ஐயா...

    ReplyDelete
  3. பட்டப் பகலில் வங்கியிலே-பெரும்
    பணமே கொள்ளை போகிறது
    வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறது!
    திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
    கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!
    .....................

    அருமையான வரிகளைப் பின்னி ஒரு
    தேவிமிகு கவிதையினை உங்கள் வலைத்தளத்தில்
    பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  4. நிகழும்
    நிகழ்வுகளை
    நிதர்சனமாய்
    நிலை
    நிறுத்திய
    நிகரில்லா பதிவு அய்யா அருமை.

    ReplyDelete
  5. \\\நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
    நீங்கா கறையே கொள்வீரே!\\\ மிகச் சரி .

    ReplyDelete
  6. இனிய மாலை வணக்கம் ஐயா,
    அநீதிகளைக் கண்டு பாராமுகமாய் இருப்போர் பற்றிப் பேசும் விருத்தக் கவிதையினை வீறாப்புடன் தந்திருக்கிறீங்க.

    மக்கள் மனம் ஒரு நாள் நிச்சயமாக மாறும், அநீதிக்கு எதிராக எழும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  7. அன்றாட நாட்டு நிகழ்வுகளை வேதனையுடன் கவிதையாக்கி இதயம் கனக்க விட்டுவிட்டீர்கள் புலவரே!

    ReplyDelete
  8. //இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
    இரண்டு அரசுக்கும் திண்ணமே
    நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
    நீங்கா கறையே கொள்வீரே!//
    அருமை ஐயா ..
    எந்த அரசுகள் வந்தாலும் நம் நிலைமை மாறுவதில்லை
    என்பது வேதனை :(

    ReplyDelete
  9. நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் ஏற்ற கவிதைகள் புனைய உங்களுக்கு ஈடு இலை..

    நல்ல கவிதை....

    ReplyDelete
  10. '..இலையதை தடுத்திடும் எண்ணமே!...''
    எதற்காக அரசு தெரியலையே!...
    என்று இந்நிலை மாறுமென்பதும் தெரியலையே!
    நல்ல வரிகள் பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  11. நல்ல கவிதை.
    வேதனையான நிலை தான்.

    ReplyDelete
  12. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று முழங்கியவரெல்லாம் மக்கள் வாழ்வே மகேசன் வாழ்வு என்று எண்ணும் காலம் என்று வருமோ? வேதனை உரைத்த விதம் வெகுநன்று ஐயா.

    ReplyDelete
  13. கவிதையின் கருத்து மனதில் பதிந்தது. அவசியம் சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயத்தை வருத்தமுடன் கவி பாடியிருக்கிறீர்கள். இந்நிலை மாறும் என்றும் நம்புவோம்!

    ReplyDelete
  14. பட்டப் பகலில் வங்கியிலே-பெரும்
    பணமே கொள்ளை போகிறது
    வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறது!

    இப்படித்தான் நடக்கிறது அரசு என்ன செய்கிறது என்று தெரியவில்லை..வாசித்தேன் வாக்கிட்டேன் நன்றி ஐயா.

    ReplyDelete
  15. நாட்டின் நிலைமையை தெளிவாக ஆதங்கமுடம் கூறும் அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  16. Arumaiyana kavithai iya kodumaIkal adchi seium naadu

    ReplyDelete
  17. ரிஷபன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. மகேந்திரன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. கா ந கல்யாணசுந்தரம் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. .R.ராஜகோபாலன் said


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. koodal bala said...



    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. நிரூபன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. தனிமரம் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. jayaram thinagarapandian said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. வெங்கட் நாகராஜ் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. kavithai (kovaikkavi) said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. Rathnavel Natarajan said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  28. கீதா said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. கணேஷ் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. மதுமதி said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  31. துரைடேனியல் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  32. ஷைலஜா said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  33. கவி அழகன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  34. நாட்டு நடப்புகளை கவிதையில் சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  35. உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!

    உடனடியாக கவனத்தில் கொண்டு முடிவுக்கு வரட்டும் அநியாய கொடுமைகள்..

    ReplyDelete
  36. வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
    வாழ்வை நடத்திட கடலோரம்
    அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!

    உங்கள் கவிதையில் இருக்கும் யதார்த்தம் அருமை ,,,,,,,,,,,,

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...