Sunday, February 12, 2012

குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை...?


குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை
குருடாக செய்ததுவே நமதுதேசம் !
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம்
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே!
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில்
வரநீரும் காரணமே கையாமதன்னை!

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே
ஏற்படவும் காரணமா சர்வதேசம்!
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகள்மூட-தமிழன்
கல்நெஞ்சம் கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும் சர்வதேசம்-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

புலவர் சா இராமாநுசம்

24 comments :

  1. எண்ணுங்கள் என்செய்யும் சர்வதேசம்-இந்த
    இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம் //mikavum sirappu

    ReplyDelete
  2. சிந்திக்கும் விதமாகச் சொன்னீர்கள் புலவரே

    ReplyDelete
  3. கவிதைக்கான தலைப்பும், கவிதையும் மிகச்சிறப்பு ஐயா! உணர்வுகள் பெருகச் செய்யும் அழகிய சந்தங்கள்!

    ReplyDelete
  4. வேதனையான கவிதை.

    ReplyDelete
  5. கல்நெஞ்சம் கொண்டானே இதயம்மூட
    இங்கே ...
    உண்மைதான் ஐயா.

    ReplyDelete
  6. ஈழத்து வேதனைகள் உங்கள் கவிதை மூலம் கொணர்வதற்கு நன்றி ஐயா. உங்கள் பணிதொடரட்டும். குருடாய் போன சர்வதேசத்தின் கண்கள.... கல்லாகிப் பொன உங்கள் நாட்டு இதயம். இன்றும் அழுது கொண்டே வாழ்கின்றோம் எம் இன் உயிர் தமிழீழத்தில் அகதியாய் அநாதையாய் அடிமையாய்.

    ReplyDelete
  7. மன வேதனையை அப்படியே
    உருக்கமாக கவியாக்கி இருக்கிறீர்கள்
    புலவரே.

    ReplyDelete
  8. எண்ணுங்கள் என்செய்யும் சர்வதேசம்-இந்த
    இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

    ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்

    ReplyDelete
  9. மனம் கொண்ட ஆற்றாமை இங்கே அதிரும் கவி வடிவாய். மிகவும் வேதனையாக உள்ளது ஐயா.

    ReplyDelete
  10. கவிதை அழுகிறது கேட்க ஆளில்லை அதான் சர்வதேசம் மனித நேசம்

    ReplyDelete
  11. மாலதி said...

    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. guna thamizh said...


    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. Rathnavel Natarajan said...


    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. sasikala said...


    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. சத்தியா said...

    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. மகேந்திரன் said...


    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. Ramani said...


    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Ramani said...

    ஓட்டுக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. கீதமஞ்சரி said...


    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. dhanasekaran .S said...


    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. காட்டான் said

    இன்றும் என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. தங்கள் கவிதையைப் படித்ததும் ஏனோ வலிக்கிறது. இதில் நாமும் மறைமுக குற்றவாளிகளாகிவிட்டோமே என்று..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...