Monday, April 23, 2012

ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்!


ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
   உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
சாயாத நீதிவழி என்றும் வேண்டும்
   சாதிமதம் பார்க்காத மனமே வேண்டும்!
காயாகிக் கனியாகக் காக்க வேண்டும்
   காலத்தை பயனாகக் கழிக்க வேண்டும்!
ஆயாத செயல்தன்னை நீக்க வேண்டும்
   ஆணவத்தை அடியோடு அகற்ற வேண்டும்!


கோபத்தைக் கொடிதென்று எண்ண வேண்டும்
    குடிகெடுக்கும் குடிதன்னை ஒழிக்க வேண்டும்!
ஆபத்தை முன்கூட்டி அறிதல் வேண்டும்
    அழுக்காறு ஆசைகளை அடக்க வேண்டும்!
பாபத்தை செய்யாது இருக்க வேண்டும்
   பண்பதனைப் பாடறிந்து ஒழுக வேண்டும்!
தீபத்தைப் போல்தியாகம்  செய்ய வேண்டும்
    திட்டமிட்டே தினந்தோறும் நடக்க வேண்டும்!


முன்னோரின் மூதுரையை ஏற்க வேண்டும்
    முறையாகக் கல்விதன்னைக் கற்க வேண்டும்!
பின்னோரின் நலந்தன்னைப் பேண வேண்டும்
    பிழைசெய்யின் மன்னிப்புக் கோர வேண்டும்!
தன்னேர் இல்லாத தகமை வேண்டும்
   தாய்போல தாய்மெழியைப் போற்ற வேண்டும்!
இன்னாரே என்றாலும் மதிக்க வேண்டும்
   இனியசொல் பேசலே என்றும் வேண்டும்!

                                            புலவர் சா இராமாநுசம்

22 comments :

  1. நல்ல அறிவுரைகள் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அண்ணே நல்லா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  3. ஐயா,

    எதுவெல்லாம் வேண்டும் என தொகுத்து, கவிதையாய் வடித்து தந்திருக்க்கும் பாங்கே பாங்கு.

    ReplyDelete
  4. நல்ல அறிவுரைகள்...பின்பற்ற முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  5. வேண்டுதல் குறித்த சிறப்பான பதிவு ஐயா .

    ReplyDelete
  6. தினம் இது போல் உங்கள் படைப்பு வேண்டும்...

    ReplyDelete
  7. முயற்சி எப்படி இருக்க வேண்டும் என அற்புதமாகச் சொன்னீர்கள்.எல்லாமே அருமை.

    ReplyDelete
  8. கோபத்தை கொடிதென்று எண்ண வேண்டும். இனிய சொல் பேசலே என்றும் வேண்டும். அருமையான வரிகள். மிக ரசித்தேன்.

    ReplyDelete
  9. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. விக்கியுலகம் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. சத்ரியன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. koodal balasaid...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சசிகலா said


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. ரெவெரிsaid...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. சென்னை பித்தன் said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கணேஷ்said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. வேண்டியவற்றை வேண்டுமென்று கடவுளிடம் வேண்டி நின்றால், வேண்டாதது நமக்கு கிட்டாது ஐயா, வேண்டியவற்றை பட்டியலிட்டு பகிர்ந்தமைவுக்கு நன்றி

    ReplyDelete
  18. வேண்டும் வேண்டுமென்று வேண்டுதல் எம்மிடமே !

    ReplyDelete
  19. அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  20. ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
    உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
    சாயாத நீதிவழி என்றும் வேண்டும்
    சாதிமதம் பார்க்காத மனமே வேண்டும்.....


    நல்ல வரிகள்.....ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய விடயம் இது.

    ReplyDelete
  21. அருமையான கவிதை நன்றி

    ReplyDelete
  22. இன்றைய இளைய சமுதாயத்துக்குத் தேவையான அறிவுரை.என் வலைப்பூவில் திருமூலரின் சூனிய சம்பாஷணை,வந்து பாருங்களேன் ஐயா!
    http://shravanan.blogspot.com/2012/04/blog-post.html

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...