Friday, August 30, 2013

திருநாள் நமக்கு இதுவன்றோ நீர் திரளாய் வந்தால் அதுவன்றோ


ஒருநாள்  இடையில்  மட்டுமே!-நம்
   உள்ளத்தில்  உவகை  கொட்டுமே
திருநாள்  நமக்கு  இதுவன்றோநீர்
   திரளாய்  வந்தால் அதுவன்றோ

ஆண்டுகள் தோறும் இனிமேலே-நடக்க
    அழகாய்  இனிக்க  கனிபோல
வேண்டிய  அனைத்தும் உய்வோமே நல்
    விளக்கமாய்  திட்டம்  செய்வோமே

அணையா  விளக்காம்  வலைதாமேஎன்றும்
     அழியாத்  ஒன்றதன்  நிலைதாமே
இணையம்  தானே  நம்மூச்சேபேதம்
    இல்லை    இல்லை  மறுபேச்ச

வாரீர்  வாரீர்  வலையோரே!-திரண்டு
    வந்தால்  உமக்கு  நிகர்யாரே!
பாரீர்! பாரீர்   உலகோரே!-எங்கள்
    பதிவர்கள்  கூட்டத்தைக்   காணீரே!
                       புலவர் சா இராமாநுசம்

3 comments :

  1. நானும் உங்களோடு சேர்ந்து வரவேற்கிறேன்

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்புக்கு வர இயலாவிட்டாலும், மனதெல்லாம் உங்களோடேதான் இருக்கிறது, யாவருக்கும் வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  3. \\அணையா விளக்காம் வலைதாமே –என்றும்
    அழியாத ஒன்றதன் நிலைதாமே
    இணையம் தானே நம்மூச்சே –பேதம்
    இல்லை இல்லை மறுபேச்சே\\

    அழகாகச் சொன்னீர்கள் ஐயா. பதிவர் சந்திப்பு சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...