Monday, October 28, 2013

சூடும் சுரணையும் நமக்கில்லை –சேர்ந்து சொல்லியும் மத்தியில் கேட்பதில்லை





சூடும் சுரணையும்  நமக்கில்லை –சேர்ந்து
      சொல்லியும்  மத்தியில் கேட்பதில்லை
வாடும் மீனவர்  வாழ்வில்லை -நாளும்
      வருந்தும் அவன்குரல்  மாறவில்லை
கேடும்  செய்தவன் நாட்டிற்கே –நாம்
       கேட்டும் போவதாய் ஏட்டிற்கே
நாடும் அறிந்திட சொல்கின்றார் – தெரு
      நாயென நம்குரல் கொள்கின்றார்
              
உண்மை! தமிழா  எண்ணிப்பார் –இந்த
      உலகில் நமையார் மன்னிப்பார்
கண்ணை  விற்று ஓவியமா – என்ற
      கதைதான் மத்தியின்  காவியமா
விண்ணை முட்டும்  பெருமைதனை –அற
     வழியில் தமிழன் அருமைதனை
 திண்ணை விட்டு  எழுவாயா –வடக்கு
      திசையை நோக்கியே தொழுவாயா!
         

பதவி ஆசைகள்  போகட்டும் –ஆட்சி
    பரம்பரை  சொத்தெனல்  ஏகட்டும்
உதவி அல்லவே  உரிமையென –அதை
    உணர்ந்து செயல்படின் பெருமையென
நிதமே நடந்து கொண்டாலே –வெற்றி
     நிலைபெறும் உம்முடை  தொண்டாலே
இதுவே ! இன்றே! உள்ளவழி – எனில்
     இழிவே ! என்றும் மாறாப்பழி!
    
   

13 comments :

  1. தமிழர்களின் நெஞ்சக் குமுறலை கவிதையாய் வடித்து விட்டீர்கள் ... விடியலுக்கு எத்தனைதான் பொறுத்து இருப்பது ?
    த.ம.1

    ReplyDelete
  2. /// உதவி அல்லவே உரிமையென – அதை உணர்ந்து செயல்படின் பெருமையென... ///

    செயல்பட்டால் பெருமை தான் ஐயா...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உணர்ந்து செயல்பட்டால் நன்மை.. தலைப்பே சிந்திக்க வைக்கிறது.
    பகிர்வுக்கு நன்றிங்க ஐயா

    ReplyDelete
  4. சூடும் சொரணையும் இழந்த பிறகன்றோ பதவிகளில் முன்னுக்கு வரமுடிகிறது! (அரசியலில் மட்டுமல்ல, அலுவலகங்களில் கூட!) யாராலும் ஏற்கமுடியாத அறிவுரைகளைக் கூறலாமா, தலைவரே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  5. வருத்தமாய் இருக்கிறது

    ReplyDelete
  6. வருத்தத்தை அழகிய கவிதையாக்கி இருக்க்கிறீர்கள் ஐயா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உணர்ந்து செயல்பட்டால் நன்மை....

    உணர்ந்து கொள்வதே இல்லை.... அது தான் கொடுமை.....

    த.ம. 7

    ReplyDelete
  8. [[சூடும் சுரணையும் நமக்கில்லை:]]
    உண்மை தான்: தமிழ்மணம் + 8

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...