Tuesday, November 26, 2013

தேசியம் என்றாலே பொருளறிய தாரே !

 

தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே!
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமது இன்றே !
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்ட கொட்ட குனிவதா கேலியவர்பேச!
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்ப்பென்னும தீநம்மை-சுற்றி !


புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. வணக்கம்
    ஐயா
    பதிவு அருமை வாழ்த்துக்கள்...ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றாய்ச் சொன்னீர்கள்! கர்நாடகமும், ஆந்திரமும், ஏன், கேரளமும் கூட தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராது! தமிழக மீனவர்கள் பற்றி இந்திய அரசுக்கு அக்கறை இல்லை! என்ன தேசியமோ!

    ReplyDelete
  3. அர்த்தமுள்ள வரிகள் ஐயா.... நன்றி.

    ReplyDelete
  4. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  5. தமிழ் நாட்டு மீனவர்கள் தமிழர் என்பதால் தான் இலங்கை கடற்படை கொல்கின்றது.அதே காரணத்தால் தானோ இந்திய அரசும் அவர்களை பற்றி கவலை கொள்ளவில்லை

    ReplyDelete
  6. வருந்த வேண்டிய நிகழ்வு

    ReplyDelete
  7. தமிழக மீனவர் சிக்கல்
    என்று தீருமோ
    அன்று தான்
    தமிழருக்குச் சுதந்திர நாள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...