Wednesday, November 27, 2013

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர்



மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
மகிழும் பக்சே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
பழியும் பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும் எண்ணாதே-மேலும்
வேதனை எதையும் பண்ணாதே நீ
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
தோல்வியே உனகுலம் விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான்

புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. மிக்க தன்றி!

    ReplyDelete
  2. மாவீரர்கள் சாவதில்லை!
    சாவின் பின்னும் வாழ்கின்றனர்!

    ReplyDelete
  3. மறவர்கள் மரிப்பதில்லை...

    உணர்வுமிக்க உன்னத கவிதை ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  4. மிக்க நன்றி!

    ReplyDelete
  5. கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
    கூறச் செய்தீர் மிகநன்றே
    வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
    வீழப் போவது நீங்கள்தான்//எப்போது அந்த நாள் வருமென்றே காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  6. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...