Monday, December 30, 2013

அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\ ஆத்மி கட்சி திவாலே!






அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\  
    ஆத்மி கட்சி திவாலே!
வந்தார் ஊழல் ஒழிக்கவென –கிழிய
    வாயும் ஒலிக்க முழக்கமென!
தந்தார் மக்களும்  ஓட்டுகளை-வீசித்
     தள்ளினர் இலஞ்ச  நோட்டுகளை
அந்தோ!! உண்மை! அறியாரே – நாளும்
    அடுத்தென விரைவில் புரிவாரே!

பக்கா ஊழல் துணையாக –இன்று
    பதவி ஏற்றார் பிணையாக
முக்கா கிணறு  தாண்டுவதா –இவர்
    முடிவு நாட்டுக்கு வேண்டுவதா!!!?
பாழாய் கிணற்றில் வீழ்ந்துவிட்டார் –ஏனோ
   பதவி ஆசையா !! தாழ்ந்துகெட்டார்
வாழா    வெட்டி ஆட்சிக்கே –முதல்வர்
    வந்தார் இவரென  சாட்சிக்கே

         புலவர்  சா  இராமாநுசம்

6 comments :

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. This shows how some people who can write a blog can even be so innocent

    and ignorant of things happening around and continue to live in an island and think

    themselves knowledgeable. Or their writings may be for some some benefit,

    Namakkal Venkatachalam

    ReplyDelete
  3. கேஜ்ரிவால் கவிதை நன்றாக உள்ளது ஐயா. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.

    புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. பார்க்கலாம் என்ன செய்யப் போகிறார் என....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...