Sunday, January 12, 2014

தைமகளே! தைமகளே! வருக! வருக!- ஈழத் தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!





தைமகளே!  தைமகளே!  வருக! வருக!- ஈழத்
    தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!
கையிகந்து  நாள்தோறும் தொல்லை  உற்றே-சிங்கள
    கயவர்களால் எண்ணில்லா துயரம்  பெற்றே!
செய்யவழி ஏதுமின்றி தமிழர் அங்கே!- உலகு
    செப்பினாலும் கேட்பதற்கு  நாதி  எங்கே!
உய்யவழி  செய்வாயா இந்த ஆண்டே –நம்பி
    உனைப்போற்றி ,ஏற்கின்றோம்  நாங்கள் ஈண்டே!

                                      புலவர்  சா  இராமாநுசம்

16 comments :

  1. ஈழமக்கள் துயர்தீர ஈந்த இக்கவிதை
    ஈர்த்தது என் சிந்தையை இனிதே.....!

    அருமை அருமை ...! நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  2. "உங்கள் நம்பிக்கையைக் கெடுப்பானேன்" என்று சில அரசியல்வாதிகள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது. அனேகமாக அடுத்த தையிலும் இதே கவிதைக்குத் தேவை இருக்கும். (2) புத்தகக் காட்சிக்கு எப்போது வரப்போகிறீர்கள்?

    ReplyDelete
  3. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
    தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் அய்யா...

    ReplyDelete
  5. கவிதை அருமை ஐயா...
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. அற்புதமான கவிதைகள் படைக்கும் தங்களின் உள்ளக்
    குமுறல்கள் கேட்டுத் தை மகளும் மனம் மகிழ வரமருள்வாள் ஐயா !
    சிறப்பான பகிர்வுக்குத் தலை வணங்கி நிற்கின்றோம் .மிக்க நன்றி
    ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  7. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  8. மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...