Monday, January 13, 2014

அன்பின் இனிய உறவுகளே! – உம் அனைவரின் வாழ்த்தென் வரவுகளே!




அன்பின் இனிய உறவுகளே! – உம்
அனைவரின் வாழ்த்தென் வரவுகளே
இன்பின் இருப்பிடம் என்னுளமே –என
இணையம் தந்தது அவ்வளமே
துன்பின் நிழலும் என்மீதே –என்றும்
தொடாது காக்கும் உம்மீதே
என்பின் பிரியாச் சதைபோன்றே-நாளும்
இருந்திட , வாழ்த்தென் புத்தாண்டே!

புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. தையோ ,சித்திரையோ தமிழ் புத்தாண்டு என முன்பின் இருந்தாலும் வாழ்த்திற்கு நன்றி அய்யா !
    +1

    ReplyDelete
  2. தாங்களுக்கு எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா .

    ReplyDelete
  3. தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. புலவர் அய்யாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

    ReplyDelete
  7. தங்களின் வாழ்த்துப் பா கண்டு மகிழ்ந்தோம் மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .இறைவன் உங்களுக்கும் எல்லா நலனையும் வழங்கிட
    வேண்டுகின்றோம் .

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  11. சிறந்த கவிதை. உங்களுக்கும் எங்களது வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...