Friday, February 14, 2014

காதலர் தின வாழ்த்துக் கவிதை





காதலர் தினமே –எதிர்ப்பில்
        கலங்கா மனமே
ஆதலே வேண்டும் –அதுவே
        ஆவலைத் தூண்டும்
நோதலும்  வருமே –மேலும்
     நேசமும்  தருமே
சோதனை பலவே –அதனால்
     சோர்ந்திடல்  இலவே

சாதியும் பாரா – எதிலும்
    சமத்தும் கோரா
பீதியால்  அழியா-பிறர்
   பேச்சினால் ஒழியா
ஆதியில் இருந்தே – இது
   அழியா மருந்தே
பாதியில் பிரிவதே –வெறும்
   பருவத்தால்  வருவதே

உண்மைக்  காதல் –இருவர்
   ஒன்றென ஆதல்
திண்மை ஒன்றே –நெஞ்சில்
   தேவை  நன்றே
நன்மை விளைய –துயர்
    நஞ்சினைக்  களைய
இன்மை நீங்கும் – காதல்
    இளமையாய்  ஓங்கும்

புலவர்  சா  இராமாநுசம்


16 comments :

  1. பய புள்ளைங்களுக்கு இப்படி நீங்க வாழ்த்து சொல்வீங்க என்று நான் நினைச்சுப் பார்க்கலே ,அசத்திட்டீங்க !
    த.ம 1

    ReplyDelete
  2. /// இருவர் ஒன்றென ஆதல் /// சிறப்பான வரிகள் ஐயா...

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உண்மைக் காதல் –இருவர்
    ஒன்றென ஆதல்
    திண்மை ஒன்றே –நெஞ்சில்
    தேவை நன்றே
    நன்மை விளைய –துயர்
    நஞ்சினைக் களைய
    இன்மை நீங்கும் – காதல்
    இளமையாய் ஓங்கும்//

    அருமையான வாழ்த்து! புலவரே! இந்த வயதிலும், உங்கள் மூன்றாம் தலைமுறைக்கு, இப்படியொரு அருமையான காதலர் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியமாக உள்ளது!! காதலை வாழ்த்துவதில் வயதில்லி என்பது தெரிகின்றது! எண்ணம்தான் முக்கியம்!

    அருமை!

    தம.

    ReplyDelete
  4. "சாதியும் பாரா – எதிலும்
    சமத்தும் கோரா
    பீதியால் அழியா-பிறர்
    பேச்சினால் ஒழியா
    ஆதியில் இருந்தே – இது
    அழியா மருந்தே" எனக் கூறும்
    அடிகளை அடியேன் விரும்புகிறேன்!

    ReplyDelete
  5. மனத்தைக் கவர்ந்த காதலர் தினக் கவிதை அருமை ! தலை வணங்குகின்றேன் ஐயா .

    ReplyDelete
  6. காதலின் வலியும் சுகம்தான் அய்யா !

    ReplyDelete
  7. காதலர் தின சிறப்புப் பாடல் மிகச் சிறப்பு..... பகிர்ந்தமைக்கு நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...