Tuesday, September 16, 2014

தெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற தெளிவுடனே முடிவெடுத்தல் உமது கடனே!



வம்புதர பாகிஸ்தான் மேலும் ஒன்றே –சீனா
வருகிறது துணைபோல நினைக்க இன்றே-எனவே
தும்புவுட்டு வால்பிடிக்க முயல வேண்டாம்-இதுவே
தொடர்கதையாய் ஆகிவிடின் துயரே ஈண்டாம்!-வீணில்
அம்புதனை நோவதிலே பயனே இல்லை-மத்தியில்
ஆள்வோரே! ஆய்வீரே! இதற்கோர் எல்லை!- ஆக
தெம்புடனே கட்சிகளை திரட்டி உடனே –ஏற்ற
தெளிவுடனே முடிவெடுத்தல் உமது கடனே!


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. வணக்கம் ஐயா !

    மிகவும் சரியான முடிவு ! கொள்ளைக்காரர்கள் தம் சுயரூபத்தை
    வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் மறைவில் இருந்து
    திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் இவர்களைத் தான் முறையே
    கண்டு வேரறுக்க வேண்டும் ! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  2. அடிக்கடி சீன ராணுவம் அத்துமீறி நுழைகிறது என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன .முளையிலேயே கில்லி எறிவதுதான் நல்லது !
    த ம 2

    ReplyDelete
  3. எல்லைகளில் பதட்டம் கொடுக்கும்
    நாடுகளின் செயல்பாடுகளை முளையிலேயே
    கிள்ளி எறிவது அவசியம்...
    சரியான வரைமுறைகளுடன் பேச்சுவார்த்தை
    நடத்துவது அவசியம்...
    நல்ல கவிதை பெருந்தகையே...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...