Thursday, October 23, 2014

தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ!



தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும்
தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ
கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா-என்ன
காரணமோ தெரியவில்லை! போதைதரும் மதுவா

மனம்நோகப் பலபேரும் எழுதிவிட்ட பின்பும் –குறை
மாறவில்லை என்றாலே வளராதோ துன்பும்
தினம்போல தவறாது வலையுலகில் வந்தீர் –பதிவைத்
திரட்டுயென தொகுப்பாக முறைப்படித்தித் தந்தீர்

நன்றியதில் மாற்றமில்லை வாழ்த்துகின்றோம் உம்மை-இன்று
நடக்கின்ற முறைகண்டு வருந்துகின்ற எம்மை
என்றும்போல் அரவணைத்து கு(க)றைநீக்க வேண்டும் –நாமே
இணைந்தால்தான் பதிவுலகு வளர்ந்திடுமே யாண்டும்

புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. அய்யா ,தாங்களும் சொன்ன இந்த நேரத்தில் ,தமிழ் மணத்தில் அத்தகைய பதிவுகள் வருவது நின்று விட்டது ,மகிழ்ச்சி தரும் விஷயம் !
    தம1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. ஆம் அய்யா! தமிழ்மணம் மீது உங்களுக்குள்ள ஆதங்கம் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. முன்புபோல் பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும் தமிழ்மணம் பாருங்கள் என்று பரிந்துரை செய்ய யோசனை செய்ய வேண்டி உள்ளது.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. தமிழ்மணம் பதிவுகளுக்கு எங்கள் ப்ளாக் பதிவுகளை சப்மிட் செய்வதோடு சரி. அங்கு சென்று பார்ப்பதில்லை. எனவே இது பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...