Tuesday, December 9, 2014

பேறாகு மென்றேதான் பேசு!



சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயலேதான்!-தொல்லுலகில்!
மாறாத உண்மையது மாமேதை வள்ளுவர்சொல்
பேறாகு மென்றேதான் பேசு

புலவர்  சா  இராமாநுசம்

8 comments :

  1. சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிதே - பகலுமெழப்
    பட்டகலு மப்பனிபோல் பாபடைத்தீர் நான்படிக்க
    விட்டகலும் சூழும் வினை!

    அருமையான வெண்பா அய்யா!

    இன்னும் தாருங்கள் தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தவறாமல் வந்தே தவறுவரின் கண்டே
      துவளாமல் சுட்டுகின்ற தோழ- நவமணியே!
      ஒப்பில்லை நட்புக்கே உம்மைப்போல் என்றேதான்
      தப்பில்லை! சொல்லத் தகும்

      Delete
  2. ஆகா
    கற்றாரை கற்றோரே காமுருவர் என்று படித்திருக்கிறேன்.
    வெண்பாவிலேயே வாழ்த்தும்,
    வெண்பாவிலேயே பதிலும்
    இப்பதிவில் கண்டேன்
    மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி
    தம 1

    ReplyDelete
    Replies
    1. காமுற்றே வாழ்த்தும் கரந்தையார் அன்புள்ளம்
      யாமுற்ற பேறாகும் இன்றேதான் - தாமுற்ற
      பாசத்தைக் காட்டியவர் பண்பாடாய் பாராட்டி
      நேசத்தைக் காட்டினார் பார்!

      Delete
  3. அருமை ஐயா.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. அருமை... அருமை...

    உண்மை ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...