Friday, January 9, 2015

திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!



அழிந்தது அரக்கர் ஆட்சி-இலங்கை
அரசியல் மாற்ற காட்சி!
வழிந்தநம் தமிழர் கண்ணீர் –பெருகி
வெள்ளமாய் அடிக்க எண்ணீர்!
ஒழிந்தது ஆணவக் ஆட்சி –இன்று
உலகமே போற்றும் மாட்சி!
கழிந்தநாள் மறப்ப தல்ல-அவை
கனவென நினைத்துத் தள்ள!


வருமாட்சி எப்படி என்றே –கேள்வி
வந்திட நெஞ்சில் ஒன்றே!
பெருமாட்சி செய்யத் தானே-சற்று
பெருமூச்சு எழவும் வீணே!
தருமாட்சி நன்றாய் காண –ஈழத்
தமிழரும் உரிமை பூண!
திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை
திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. உண்மை ஐயா சநேதோஷமான உண்மை ஐயா.

    ReplyDelete
  2. இனிமேலாவது நல்லதே நடக்கட்டும்... நடக்கும்...

    ReplyDelete
  3. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  4. பேயரசு அழிந்து குறித்து பாடிய கவிதை
    உள்ளம் குளிர்வித்தது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான கவிதை ஐயா!

    பொறுத்திருந்து பார்ப்போம்! நிகழப் போவது என்னவென..!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  6. வருமாட்சி எப்படி என்றே –கேள்வி
    வந்திட நெஞ்சில் ஒன்றே!//
    நல்லதே நடக்கட்டும் ஐயா

    ReplyDelete
  7. தெரிந்த பிசாசு ஒளிந்து விட்டது ,my3 ' தெரியாத தேவதையா' என்பது சிலநாளில் தெரிந்து விடும் !
    +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...