Friday, February 20, 2015

மீள்பதிவுதான் என்றாலும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய நேரம்!



ஏழை,பணக்  காரருக்கு  நீதி  ஒன்றே –என
    எண்ணிவிட இயலாத  நிலைதான்  இன்றே!
பேழைதனில்  உள்ளபணம் மாற்றி  விடுமே –அறப்
    பிழையன்றோ  இதனாலே  முற்றும்  கெடுமே!
கோழைகளாய்  வாய்மூட  குமுறும்  நெஞ்சம் –ஏழைக்
     குரலங்கே  எடுபடுமா!  அந்தோ  அஞ்சும்!
வாழவழி செய்திடுமா  புதிய  ஆட்சி –இனி
     வருங்கால நடைமுறைகள் வழங்கும்  சாட்சி!
     
வற்றாத  ஊற்றாக  ஊழல்  இங்கே –இனியும்
     வளர்ந்திட்டால் வந்திடிமா  வளமை அங்கே!
முற்றாக  ஒழித்திடவே  வழிகள்  தேடி –அதை
      முதற்பணியாய்  செய்வீரேல் நன்மை  கோடி!
உற்றாரா ! உறவினரா  உரிமை கொண்டே –எவர்
      உம்மிடமே வந்தாலும் மறுத்து  விண்டே!
பொற்றா மரையாக  விளங்க வேண்டும் –அரசின்
      புகழுக்கே, சான்றாகும் ! அதுவே  ஈண்டும்!
புலவர்  சா  இராமாநுசம்

6 comments :

  1. தாமரையை துவம்சம் செய்து வீட்ட அரவிந்த் கேஜ்ரிவால் பொற்றாமரையாக விளங்க வேண்டுமென்பதே என் எதிர்ப்பார்ப்பும் !
    த ம 1

    ReplyDelete
  2. சரியான தருணமே ஐயா.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. நன்மை கோடி... அறிவார்களா...?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...