Sunday, May 3, 2015

உண்ணில்லார் இன்றுபலர்! வாடுவதோ பசியால்! உதவுங்கள் நல்லோரே ஏற்றவழி கண்டே!



எண்ணில்லார் இறந்தார்கள் நேபாளம் தன்னில்
ஏற்பட்ட நிலநடுக்கம்! ஐயகோ! எண்ணில்
கண்ணில்தான் நீர்வற்ற அழுகுரலே எங்கும்
காண்கின்ற தொலைக்காட்சி காட்டுவது அங்கும்
புண்ணில்தான் வேல்தன்னை பாய்ச்சுவதைப் போன்றே
பொழிந்திட்ட மாமழையும் கொடுமைக்குச் சான்றே
உண்ணில்லார் இன்றுபலர்! வாடுவதோ பசியால்!
உதவுங்கள் நல்லோரே ஏற்றவழி கண்டே!


புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. துயர் தீர்க்க நிச்சயமாய் அனைவரும் உதவுவோம் !

    ReplyDelete
  2. தன்னால் முடிந்தளவு உதவ வேண்டும் ஐயா...

    ReplyDelete
  3. தன்னிகரற்ற தனிப் பெருங் கருத்தை
    தந்திரீரே அய்யா! உன்னருங் கருத்தை
    உலகம் ஏற்கா தொழியாது அய்யா!
    நில நடுக்கமினி வேண்டாமய்யா!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. உதவ வேண்டும் ஐயா

    ReplyDelete
  5. விரைவில் துயர் நீங்கட்டும்
    தமிழ் மணம் முதலாவது

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    இன்று அவர்களுக்கு நாளை நமக்கு.. எப்போதும் உதவுவோம்..... துயரம் தீரும். த.ம 7
    நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. நேபாளத் துயர் நீங்க
    எல்லோரும் உதவுவோம்

    ReplyDelete
  8. முடிந்தவரை உதவி, நலம் பெற வேண்டுவோம் ஐயா.

    தம + 1

    ReplyDelete
  9. நேபாளத்தைப் பற்றி தினம் தினம் வரும் செய்தியைப் படிக்கும்போது மனம் கனக்கிறது. உதவுவோம். அவர்களது வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப பிரார்த்திப்போம்.
    ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

    ReplyDelete
  10. ஈர நெஞ்சின் குரல்... அவலம் தெறிக்கிறது ஐயா,

    வேறென்ன சொல்ல?

    ReplyDelete
  11. துயர் நீங்க பாடுபடுவோம்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...