Sunday, February 21, 2016

தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும் தனக்கென நற்குணம் மிகவுடையாள்




உறவுகளே! வணக்கம்!
இன்று, எனை தவிக்க விட்டு, மறைந்த துணைவி , (மருத்துவர் , பிரமீளா
எம்.பி.பி, எஸ், டி.ஜி.ஓ )அவர்களின் பிறந்தநாள் ,ஆகும் அவர் நினைவாக நான் முன்னர் எழுதிய கவிதை------

தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும்
தனக்கெ
நற்குணம் மிகவுடையாள்
இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
எவருக்கும் மறுப்பு கூறாமல்
என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
ஏழைக்கே மருந்து தந்திடுவாள்
அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
அறிந்திட இயாலாப் பாவழியே!


புலவர் சா. இராமாநுசம்

9 comments :

  1. காலம் உங்கள் தவிப்பைத் தணிக்கட்டும். உங்கள் துணைவியார் ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  2. தங்களது துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. அன்னையின் ஆன்மா சாந்தியடையட்டும்.
    த ம 2

    ReplyDelete
  4. மறையாத நினைவுகள்.

    ReplyDelete
  5. ஆறுதல் கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  6. அன்னை இன்றும் இருந்திருந்தால் ,உங்களைப் போன்றே நானும் உளமகிழ்ந்து இருப்பேன் அய்யா !

    ReplyDelete
  7. தங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள்இல்லை ஐயா
    உலகம் உணர்ந்தவர் தாங்கள்

    ReplyDelete
  8. ஆறுதல் சொல்லும் அளவு நான் வளரவில்லை ஐயா....
    உங்கள் துணைவியார் ஆன்மா சாந்தியடைய
    இறவனை பிரார்த்திக்கிறேன் ஐயா....
    அவர்கள் நினவே உங்களுக்கு துணை ஐயா...

    ReplyDelete
  9. வணங்குகிறேன் ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...