Monday, March 14, 2016

வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!



வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க
வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!
ஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்
எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானென்று நடக்கின்ற அனைத்துமே யிங்கே- மக்கள்
தடுமாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவதும் தேளாகும்! இங்கே –நாளும்
திகைப்போடு கேட்கின்றார் அரசுதான் எங்கே?


புலவர்  சா இராமாநுசம்

10 comments :

  1. விஷம்போல் ஏறுதிங்கே விலைவாசி என்பார்..
    விஷமாவது இறங்கும் இறங்காதே விலைவாசி!

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா
    விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது

    ReplyDelete
  3. அருமையான வரிகள் ஐயா....
    கொடுமையான வலிகள் ஐயா...

    ReplyDelete
  4. உண்மையான நிலைமை இதுதான் ஐயா அருமையான வரிகள்

    ReplyDelete
  5. மாற்றம் வேண்டும் மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் ஐயா
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. விலைப்பட்டியலில் பொருளின் விலையை வாசிக்க மட்டும்தான்; வாங்க முடியாது..... அதனால்தான் விலை-வாசி!?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...