Wednesday, March 16, 2016

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் செய்வீரே!



திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
எண்ணா செயல்தரும் துயரன்றோ


மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நாமும்
குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுயமாய்,
சிந்தனை தன்னில் ஆழ்வோமே

புலவர்  சா  இராமாநுசம்

6 comments :

  1. அருமை புலவர் ஐயா...நல்ல கருத்தான வரிகள்!

    ReplyDelete
  2. அருமையான கருத்துகள் ஐயா...

    ReplyDelete
  3. அருமை ஐயா சிறப்பான வரிகள்....

    ReplyDelete
  4. அருமையான கவிதை வரிகள்.
    த ம 3

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...