Monday, March 7, 2016

முன்போல தமிழ்மணமும் வருவ தில்லை- பதிவை முறைப்படுத்தி முறையாக தருவ தில்லை!





முன்போல  தமிழ்மணமும்  வருவ தில்லை- பதிவை
      முறைப்படுத்தி     முறையாக தருவ தில்லை
என்போன்றார் பலபேரும்  ஏனோ யின்றே-வலையில்
      எழுதாது  போகின்றார்  அறியேன்  நன்றே
பொன்போலும்  பொருள்போலும்  போற்றி  வந்தார்-நாளும்
     போனாராம்! முகநூலில் பதிவே  தந்தார்
அன்போடு  வேண்டுகிறேன்  வருவீர்  மீண்டும் –எந்தன்
      அழைப்புக்கே செவிசாய்த்து தருவீர்  ஈண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

15 comments :

  1. நன்றுநன்று சொன்னீர்கள் அய்யா! உண்மை
    ....நானுமிதை ஆதரித்தேன் மெய்யா!
    நன்றி, வணக்கம். த.ம.1

    ReplyDelete
  2. த.ம.வைக் காணவில்லை என்ன ஆச்சு?
    ....தனிச்சிக்கல் புரியவில்லை நேரம் போச்சு!

    ReplyDelete
  3. தொல்லை அதிகம் ஐயா... ஓட்டளிக்க முடிவதில்லை...

    ReplyDelete
  4. Internal Server Error

    The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request.

    Please contact the server administrator, and inform them of the time the error occurred, and anything you might have done that may have caused the error.

    More information about this error may be available in the server error log.

    Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

    ReplyDelete
  5. ஐயா! இப்போது தமிழ்மணத்தில் தங்கள் பதிவிற்கு வாக்களிக்கமுடிகிறது.

    ReplyDelete
  6. கவிதையாக அழகாக சொன்னீர்கள் ஐயா இப்பொழுதும் காணவில்லை பிறகு வருகிறேன்

    ReplyDelete
  7. கவிதையாகவே பாடிவிட்டார் அய்யா !

    ReplyDelete
  8. ஆமாம் அய்யா1 தமிழ்மணம் முன்புபோல் இல்லை. பதிவுகளை இணைப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. வாக்களிக்கச் சென்றால் ஒரே சுத்தல். தமிழ்மணத்திற்கு என்ன ஆயிற்று?

    ReplyDelete
  9. வாக்களிக்க முயன்றால் சுற்றிக் கொண்டே இருக்கிறது. என்னவாயிற்று என்று புரியவில்லை.

    ReplyDelete
  10. வாக்களிக்கவே இயலவில்லை ஐயா
    பலமுறை முயன்றார்
    சர்வர் எரர் எனக் காட்டுகிறது

    ReplyDelete
  11. உண்மைதான் அய்யா ,தமிழ் மணம் ,தன் மணத்தை இழந்து கொண்டே வருகிறது !
    உங்களுக்கு மட்டுமல்ல ,யாருக்கும் வாக்களிக்க முடியலே ,எப்போது முடியுமோ அப்போது வாக்களிக்கிறேன் !

    ReplyDelete
  12. விரைவில் சரியாகும் என நம்புவோம் ஐயா.

    ReplyDelete
  13. சிலருக்குத் தமிழ் மணத்தில் இணிப்பது கடினமாகிறது எனக்கோ நான் இணைக்காமலேயே தமிழ் மந்த்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறது தமிழ் மணமா புதிர் மணமா என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்

    ReplyDelete
  14. வேண்டுகோள் ஒரு கவிதையாக
    எழுதப்பட்டதே இங்கு

    ReplyDelete
  15. அருமை..எளிமையான வரிகள்
    இன்று இணையத்தில் பலரும் தமிழ்க்கட்டுரை அல்லது வலைப்பூ என்ற பெயரில் குப்பை கொட்டிவருகின்றனர். கூகுளில் தமிழ் என்று தட்டச்சு செய்தால் தமிழ் சினிமாவும், கதாநாயகிகளின் புகைப்படமுமே குவிகிறது.
    இவற்றிற்கு மாறாக தங்களைப் போன்றோரின் இத்தமிழ்ப்பணி வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியது.
    தொடர்க தங்களின் இப்பணி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...