Sunday, October 2, 2016

அண்ணல் காந்திக்கு அஞ்சலி!


அண்ணலே காந்தி நீங்கள்-தூய
அறவழி சுதந்திரத்தை எங்கள்-இரண்டு
கண்ணெனப் பெற்றுத் தந்தீர்-ஒளிரும்
கலங்கரை விளக்கென வந்தீர்-ஆனால்
தன்னலம் மிக்கார் இங்கே-அதனை
தரமின்றி போட்டார் ! பங்கே!-எனினும்
பொன்மலர் என்றும் நீராம் –மணக்கும்
புகழ்தானே! மறையாப் பேராம்
வாழ்க காந்தி நாமம்!


புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. அவரால் வந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு அவரையே சிலர் தூற்றுவது கொடுமையிலும் கொடுமை !வாழ்க அண்ணலின் நாமம் !

    ReplyDelete
  2. காந்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் உள்ளது இளைய தலைமுறை.

    ReplyDelete
  3. குறைந்த பட்சம் அவரது பிறந்த நாளிலாவது அவரைப் பற்றி சிந்திக்கிறோமே

    ReplyDelete
  4. வாழ்க காந்தியின் பெயரம் புகழும்.

    ReplyDelete
  5. உலகத்திற்கு
    அகிம்சையைப் போதித்தவர்
    மகாத்மா காந்தியே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...