Wednesday, December 7, 2016

முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்டாரே மத்திய அரசே!


மக்கள் படும் பாடு
--------------------------
முறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள்
முடமாகி விட்டாரே மத்திய அரசே!
குறைசொல்லும் நோக்கமல்ல மத்திய அரசே-நெஞ்சக்
குமுறலாம் ஆக்கமிது மத்திய அரசே!
கறையாகும் கறையாகும் மத்திய அரசே –உடன்
கண்நீரைத் துடைப்பிரா மத்திய அரசே!
நிறைவான நிதிதன்னை மத்திய அரசே-துயர்
நீங்கிட உதவுங்கள் மத்திய அரசே!


காலத்தில் உதவாது மத்திய அரசே –மேலும்
காலத்தைக் கடத்தாதீர் மத்திய அரசே!
ஆலத்தை உண்டார்க்கு மத்திய அரசே –தேவை
அவசர சிகிச்சைதான் மத்திய அரசே!
உயிர்மட்டும் மிஞ்சிட மத்திய அரசே-மாற்று
உடைகூட இல்லாது மத்திய அரசே !
வயிர்மட்டும் எதற்காக? மத்திய அரசே-ஏனோ
வைத்தானோ இறைவன் மத்திய அரசே!

புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. உண்மை நிலையினை நடுவண் அரசு உணர்ந்ததாக்த் தெரியவில்லை ஐயா
    தம +1

    ReplyDelete
  2. கேட்கவில்லை கேட்கவில்லை புலவரே...
    உமகொன்றும் தெரியாது புலவரே...!
    இன்னும் நீர் சத்தமிட்டு பேசினால்
    துரோகி என்று சொல்லுவோம் புலவரே...!

    புலவர் என்றால் பாட்டு மட்டுமா....?
    பாடும் கூடத்தான்....!
    புலவர் என்றால் மெட்டு மட்டுமா...?
    திட்டும் கூடத்தான்...!

    எதிர்த்து கேட்க எவரும் வேண்டாம் எமக்கு...
    எதிர்த்து நின்றால் உமக்கு தான் இழுக்கு....!

    " யாராவது இப்படி உங்களுக்கு பதில் எழுத போகிறார்கள் ஐயா..."

    ReplyDelete
  3. நாணயமான மக்களை இப்படி அலைக்கழிப்பது நியாயமில்லை என்பதை மத்திய அரசு உணர்ந்ததாய் தெரியவில்லை ,துயரம் தொடர்கிறதே அய்யா !

    ReplyDelete
  4. அய்யா நீங்கள் இன்னும் அந்த காலத்து தமிழ்ப் புலவராகவே இருக்கிறீர்கள். பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்தும் நாடகம்தான் இது. இப்போதுதான் ஆட்டம் துவங்கி இருக்கிறது.

    ReplyDelete
  5. விரைவில் நிலை சரியாகட்டும்...

    ReplyDelete
  6. உண்மை உரைக்கும் கவிதை ஐயா...

    ReplyDelete
  7. நல்ல சேதி
    ஆனால் கேட்க வேண்டியவர்கள்
    செவி எல்லாம் செவிடாக அல்லவா இருக்கிறது
    மனம் தொட்ட கவிதை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...