Sunday, December 4, 2016

வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும் வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!


வாராது வந்தமழைப் பொய்த்துப் போக-மேலும்
வலுவிழந்த புயல்கூட அவ்வண் ஆக!
சீராகா உழவன்தன் வாழ்வு என்றே-துயரச்
சிந்தனையாம் ஒன்றே நிலையாய் நின்றே!
பாராள வந்தோரின் பாரா முகமே- வானம்
பார்கின்ற விவசாயி காண, அகமே!
கூரான வேல்கொண்டு குத்தல் போல-உள்ளம்
குமிறியழும் நிலைதன்னை காண்போம் சால!


புலவர் சா இராமாநுசம்

4 comments :

  1. வருத்தம் தான். ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது இயற்கையும் வஞ்சிக்கிறது.....

    ReplyDelete
  2. அடுத்த புயல் வராமலா போய்விடும் :)

    ReplyDelete
  3. புயல் வேண்டாம் அளவான மழை வேண்டுமே எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...