Saturday, July 2, 2016

நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!


நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது
நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!
தேள்போலும் கொட்டுவதோ ஊடகச் செய்தி –தாளைத்
திறந்தாலே தலைப்பினிலே முதலில் எய்தி!
வாள்போல அறுக்கிறது ! வாட்டத் துயரம்-மக்கள்
வாழ்கின்றார் !அச்சமே நாளும் உயரும்!
ஆள்கடத்தல் நடக்கிறது அடியாள் வைத்தே –உடன்
அடக்கிடவீர் ஆள்வோரே பொறியும் வைத்தே![


புலவர்  சா  இராமாநுசம்

7 comments :

  1. சினிமாவும் சில பாடல்களும் மனதைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ReplyDelete
  2. நல்ல கோரிக்கை !

    ReplyDelete
  3. இன்றைய சினிமா அதன் வசனங்கள் பாடல்கள் எல்லாமே இளைஞர்களைக் கெடுப்பதாக இருக்கிறது ஐயா. உங்கள் வேண்டுதல் நல்லதுதான்.

    ReplyDelete
  4. என்ன செயிவது ஐயா இப்படி எழுதி மனசமாதானம் கொள்வோம்
    த.ம. 2

    ReplyDelete
  5. எப்போது திருந்தப்போகிறோமோ?

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  7. திருந்துவது எப்போது.....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...