Friday, February 24, 2017

ஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்



வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து
வருமுன்னர் காத்திட ஆள்வோர் நெஞ்சம்
தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே
தடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை
கருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்
கருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே!
உருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்
உணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே!


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. கோடையில் கானல் நீரைப் பார்க்கலாம் ,பருக முடியாது என்பதை அரசு உணர்ந்து ,உடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  2. தண்ணீருக்காக ஏன் அலையவேண்டும் ஐயா? மக்கள் எல்லாரையும் கூவத்தூருக்கு கூட்டிப்போய் 'தண்ணீரால்' குளிப்பாட்ட மாட்டார்களா என்ன? அவ்வளவு கூட வசதி இல்லாதவர்களா நம்மை (இப்போது) ஆள்பவர்கள்?

    ReplyDelete
  3. நல்லது நடக்கட்டும் ஐயா

    ReplyDelete
  4. உண்மைதான் ஐயா. அவசரத்தேவையே.

    ReplyDelete
  5. குடிநீர் பஞ்சம் கவனிக்க வேண்டியது.
    மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தால் மிகப்பெரிய பிரச்சினையை நாடு எதிர்கொள்ள இருப்பது வேதனையே...

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    வரும்முன்காப்போம்...அதிரடி தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அவர்களின் தேவை மட்டும் முக்கியம் எனப்படுகிறது...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...