Wednesday, February 1, 2017

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்



மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த
   தேசமும் மதவெறி பித்தரென
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. இன்றைய மதவெறியர்கள் ஏற்று நடந்தால் நாடு நலமாகும் ஐயா

    ReplyDelete
  2. மதவெறியை எதிர்த்து நல்ல கவிதை அய்யா.

    ReplyDelete
  3. அவர்கள் ஆட்சிதானே இப்போது நடக்கிறது உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா

    ReplyDelete
  4. இந்த மத வெறி கொண்ட கும்பல்தான் ஆளணும் என்று நினைத்து வோட்டு போடும் மக்கள் திருந்தவில்லை என்றால் கலவரம்தான் பெருகும் !பாதிக்கப் படுவது அரசியல் வியாதிகள் அல்ல ,பொது மக்கள்தான் !

    ReplyDelete
  5. அருமையான கவிதை . இன்றைய ஆடசியாளர்களுக்கு தேவையான அறிவுரைகள். நன்றி ஐயா

    M. செய்யது
    Dubai

    ReplyDelete
  6. இங்கே, அமெரிக்காவிலும் மதம் சார்ந்த ஆட்சிதான் நடக்கிறது! ஒபாமா உள்பட அனைத்து ஜனாதிபதிகளும் பைபிள் மீது கைவைத்து சத்தியமிட்டுத்தான் பதவி ஏற்கிறார்கள்! முஸ்லீம்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்கிறார்கள்! மத்திய கிழக்கு நாடுகளில், மதவெறி பற்றி சொல்லவே வேண்டாம்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  7. மத வெறி
    நாட்டிற்கு நல்லது அல்லவே

    ReplyDelete
  8. மதவெறி வீட்டுக்கு, நாட்டுக்கு நல்லதல்ல...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...