Sunday, May 14, 2017

அன்னையர் தினம் நினைவுக் கவிதை!



அன்னையர் தினம்!

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?



உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. அன்னையர் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. கல்லறை போகும் வரையிலும் இருந்த கருவறையை மறக்க முடியாது தான் அய்யா :)

    ReplyDelete
  3. அருமையான கவி அன்னையர் தின வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  4. பகவான் ஜி வரிகளை கடன்வாங்கி வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  5. என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல வரிகள். அனைவருமே இதனை அனுபவிக்கமுடிகிறதா என்பது சிந்திக்கத்தக்கதே.

    ReplyDelete
  8. இந்த சுட்டியில் உள்ளதைப் படித்துப்பாருங்களேன்
    http://gmbat1649.blogspot.com/2015/05/blog-post_10.html?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...