Friday, June 2, 2017

ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்!



ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்
அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!
மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை
கூறுவது என்னவென ஆய்தே கூறும்!
குற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்!
தேறிவிடும்! தெளிவடையும் மனித குலமே
தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!


புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. மாறும் என்று நம்புவோம் ஐயா

    ReplyDelete
  2. இந்நிலை மாறும்ப்பா

    ReplyDelete
  3. மாற்றம் நிரந்தரம். நம்புவோம்.

    ReplyDelete
  4. நல்லதொரு மாற்றம் வரும் ஐயா...

    ReplyDelete
  5. மதத்தைக் கூட மறந்து பிற மதத்தில் சேர்கிறார்கள் ,சாதி வெறி மாற மாட்டேன் என்கிறதே :)

    ReplyDelete
  6. இந்த நிலை மாறும் ஐயா ..

    ReplyDelete
  7. நேர்மையுடன் ஓர்கருத்தைச் சொன்னால் போதும்
    நிச்சயமாய் ஊர்திரண்டு வந்தே மோதும்
    சார்ந்திருந்து பேசுபவர் நல்லோர் ஆவார்
    சத்தியத்தைப் பேசிவிட்டால் நொந்தே சாவார்
    போர்முனைபோல் ஆனதன்றோ எந்தன் தேசம்
    பொய்யர்களும் கொள்ளையரும் செய்தார் நாசம்
    ஆரினிமேல் உண்மைதனைச் சொல்வார் இங்கே?
    ஆயிரமாய்க் கோவிலுண்டு இறைவன் எங்கே?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...