Saturday, July 22, 2017

போகாது போகாது சாதி மடமை-சிலரின் பிழைப்புக்கே அதுதானே துணையாம் உடமை





போகாது போகாது சாதி  மடமை-சிலரின்
   பிழைப்புக்கே  அதுதானே துணையாம்  உடமை
நோகாது  வாழ்கின்றார்  சொல்லி  அதனை-அன்னார்
   நோக்கமும் நிறைவேற நாளும் இதனை
சாகாது  காக்கின்றார்! அந்தோ  கொடுமை-எனவே
   சதிகாரர் சூழ்ச்சிக்கு  மக்கள்   அடிமை
ஆகாது இதுவென்றே உணரும்  நாளே-உலக
   அமைதிக்கு வழிகாணும்! தருவீர்  தோளே!

புலவர் சா  இராமாநுசம் 

6 comments :

  1. நடைமுறை உண்மை ஐயா
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. #சிலரின் பிழைப்புக்கே அதுதானே துணையாம்#
    கட்சி ஆரம்பித்து மக்களை ஏமாற்றுகிறார்களே :)

    ReplyDelete
  3. சாதி மடமைதான் இரத்தத்திலே ஊறி போய்விட்டதே... அய்யா

    ReplyDelete
  4. சிலரின் பிழைப்பு அதுவே... உண்மை ஐயா.

    ReplyDelete
  5. சாதியை வைத்துதானே ஐயா பிழைப்பு நடத்துகின்றார்கள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...