Monday, July 17, 2017

திருத்தொண்டு செய்திட்டேன் இளமை வரையில்-உரிய தேவைதனை சேவையென அறிந்த நிலையில்







திருத்தொண்டு செய்திட்டேன் இளமை  வரையில்-உரிய
  தேவைதனை சேவையென அறிந்த  நிலையில்
            ( ஆனாலின்று )
 விருந்துண்டு  வாழ்கின்ற வயதா  இல்லை-நாளும்
  விட்டுவிட்டு  வருகிறது   நோயின்  தொல்லை
மருந்துண்டு வாழ்கின்ற  வாழ்கை  தானே-ஆனல்
   மனத்தளவில்  என்றென்றும்  இளைஞன்  நானே!  
இருந்துண்டு என்னாலே இயன்ற வகையில் –ஏதோ
    எழுதுகின்றேன் உறவுகளே நாளும்  வலையில்

புலவர் சா  இராமாநுசம்

8 comments :

  1. தங்களால் இயன்றவையை தாருங்கள் ஐயா.

    ReplyDelete
  2. இளைஞன் என்ற எண்ணம் இருக்கும் வரையில் திருத் தொண்டு தொடரட்டும் அய்யா :)

    ReplyDelete
  3. மனம் இளமையாய் இருக்கும் வரையில்
    உடல் பணிந்துதான் போகும்
    தொடர்ந்து எழுத மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனதால் என்றும் இளைஞர் நீங்கள். எங்களுக்கெல்லாம் ஊக்கமளிப்பவர் நீங்கள்.

    ReplyDelete
  5. வற்றா தமிழமுதம் பருகிய தங்களுக்கு முதுமையேது
    தொடர்ந்து கவிமழை பொழியுங்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  6. புலவர் ஐயா ! நெடுநாட்கள் ஆகிவிட்டது. தங்களை வலையில் கண்டு. இப்போது நீங்கள் வருவது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் மனதால் இளைஞர் !! எனவே அழகு தமிழில் எங்களுக்கு எல்லாம் உதாரணமாக இருக்கும் நீங்கள் இயன்ற வரை கவிதை பொழியுங்கள்!!! ஐயா.

    ReplyDelete
  7. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...

    ReplyDelete
  8. உங்களை தொடர்ந்து எழுதச் செய்வது உங்கள் தமிழ் ஆர்வம் என்று தோன்றுகிறது ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...