Saturday, August 12, 2017

பேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று ஓரளவு தந்துவிட உவகைக் கொண்டேன்!




பேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று
ஓரளவு தந்துவிட உவகைக் கொண்டேன்
சீர்ளவு குறையாமல் நன்றி விண்டேன்-நாளும்
நீரளவு மேன்மேலும் தருதல் தொண்டே!

புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. பெருமகிழ்வு தந்தது பெருமழை.பெய்தவரை மகிழ்ச்சி.

    முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. இன்னும் வேண்டும் நும் கவிதையும் பெரு மழையும்.

    ReplyDelete
  3. ஊரினிலே என்போலே நல்லான் உண்டேல்- வானம்
    ஊற்றுமென்று உவகையுடன் கண்டேன் இன்றே
    பாரினிலே சேட்டையுள்ள காலம்மட்டும்- இங்கு
    பன்னிரெண்டு மாதங்களும் வானம்கொட்டும்.

    :-) நகைச்சுவைக்காக மட்டும் ஐயா!

    ReplyDelete
  4. வரட்டும் வான் மழையும், புலவர் ஐயாவின் கவி மழையும்.
    த.ம.பிறகு

    ReplyDelete
  5. இன்னும் தொடரட்டும் ஐயா...

    ReplyDelete
  6. வருண பகவான் கண் திறந்து என்ன புண்ணியம்?! அத்தனையும் வீணா கடலுக்குள் போயிடுமே

    ReplyDelete
  7. நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் அதுபோல் மழையின் மகத்துவமும்

    ReplyDelete
  8. உங்க கவிதை மழையிலும் நனைவதும் சுகம் தான் அய்யா :)

    ReplyDelete
  9. அருமை ஐயா
    மழை தொடரட்டும்
    தம +1

    ReplyDelete
  10. மழை வேண்டியும் பின் ஓரளவு பெய்த மழையை வாழ்த்தியும் வடித்த வரிகள் அருமை !

    ReplyDelete
  11. மழையும், கவிதையும் தொடரட்டும் ஐயா.

    த.ம. ஒன்பதாம் வாக்கு.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...