Tuesday, August 15, 2017

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு ஏழைக்கு எட்டா கனியது ஆச்சு!




எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
ஏழைக்கு எட்டா கனியது ஆச்சு
பொங்கும் வறுமையைப் போக்கிட இயலா
போலிகள் ஆட்சியும் வெறுமையே! முயலா
தங்கும் முழக்கங்கள் மேடையில் ஒலிக்க
தந்திட மின்னொளி கொடிகளோ பறக்க
மங்கும் மறுநாள் அனைத்துமே ஓயும்
மறந்திட ஆமே சுதந்திரம் தாமே


புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. ஆம் ஐயா போலியாக கொண்டாடுகிறோம் மாற்றம் வேண்டும்
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. மக்களை ஏய்த்து வாழ்பவர்களுக்கே சகல சுதந்திரமும் என்றாகிப் போச்சே அய்யா :)

    ReplyDelete
  3. இனியொரு சுதந்திரம் வேண்டி போராடவும் வேண்டுமோ?

    ReplyDelete
  4. சுதந்திரம் என்பது சிந்தனையில் தோன்ற வேண்டும்

    ReplyDelete
  5. நான்காம் வாக்கு.

    சுதந்திர தினம் இன்று இரவு 12 மணி வரைதானே?!!!

    ReplyDelete
  6. ஆம் ஐயா சுதந்திர தினக் கொண்டாட்டம் எல்லாம் சும்மா வேஷம்தான்...ஒரு தினம் மட்டுமே. அன்று உணர்ச்சியுடன் எல்லாரும் பேசித் தீர்த்துவிட்டு அவ்வளவுதான்...

    த ம 2 என்று நினைக்கிறோம்

    ReplyDelete
  7. ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்ன்னு போய்க்கிட்டே இருக்கனும்.

    தம 7

    ReplyDelete
  8. சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  9. எல்லாம் ஒரு நாள் கூத்தாகிவிட்டது ஐயா.

    த.ம. ஒன்பதாம் வாக்கு.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...