Wednesday, August 2, 2017

இனியது கேட்பின் எனதரும் உறவே இனிது இனிது இல்லற வாழ்வே




இனியது கேட்பின் எனதரும் உறவே
இனிது இனிது இல்லற வாழ்வே
ஈட்டிய பொருளும் இணையில் மனைவியும்
வீட்டுடன் வசதியாய் அமைந்திடு மானால்
இனிது இனிது இல்லற வாழ்வ
இல்லற இல்லது நல்லறம் இல்லை
இணையில் வள்ளுவர் இயம்பிய வழியில்
மக்கள் செல்வம் ஆணென பெண்ணென
இரண்லடே போதும் இனிதென ஓதும்
இப்பெரு உலகில் இனியதே யாதும்
ஓப்பிலா என்றே செப்பிடல் ஒன்றே
இனிது இனிது இல்லற வாழ்வே!\\


புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. இனிய இல்லறத்துக்கு இரண்டே போதும்தான் அய்யா :)
    த ம 1

    ReplyDelete
  2. ரொம்ப ரசித்த கவிதை புலவர் ஐயா. த ம 2. இந்தக் கவிதை ஓரிரு கவிதைகளை (சங்க) நினைவுபடுத்துகிறது. (ஔவையின் தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள். இனியது கேட்கின், அரியது கேட்கின், பெரியது கேட்கின் போன்ற)

    இல்லற இல்லது நல்லறம் இல்லை - "இல்லறமல்லது நல்லற மன்று" நினைவுபடுத்துகிறது. அதனால்தான் 'இல்லது' என்று போட்டீர்களோ?

    இரண்லடே - இரண்டே

    "ஓப்பிலா என்றே செப்பிடல் ஒன்றே" - இதுல "செப்பிடல் நன்றே" என்று வந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமா?

    ReplyDelete
  3. அருமை ஐயா அழகிய வரிகள் நன்று
    த.ம.3

    ReplyDelete
  4. ஆண்டு அனுபவித்தவர் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  5. பதிவும் இனிது ஐயா. ஐந்தாவது வாக்கு.

    ReplyDelete
  6. அருமையான கவிதை ஐயா!

    தம 6

    ReplyDelete
  7. இல்லற வாழ்வே இனிது
    அருமையான கவிதை ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  8. இனிது கவிதை அருமை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...