Saturday, August 5, 2017

அன்பெனப் படுவது யாதென அறிந்திட இன்புற வள்ளும் இயம்பன கேட்பீர்!



அன்பெனப் படுவது யாதென அறிந்திட
இன்புற வள்ளும் இயம்பன கேட்பீர்
அன்பிற் கில்லை அடைக்கும் தாளே
என்பும் தருவர்! சொல்லார் தமதென!
உடலும் உயிர்போல் அன்பும் வாழ்வும்
ஆர்வம் தந்தும் நட்பினைப் பெற்றும்
அறமோ மறமோ அதுவே துணையே
அன்பில் வாழ்வு பட்ட மரமே
அகத்தின் இயல்பே அன்பெனப் படுமே
அன்பின் வழியே உயிர்கள் இயங்க
இன்றெனில் உடம்பு எலும்பொடு போர்த்திய
ஒன்றென ஓதினார் வள்ளுவப் பெருந்தகை
நன்றென நானும் பாடலை முடித்தேன்!


புலவர் சா இராமாநுசம

10 comments :

  1. அருமையான வரிகள் ஐயா தொடரட்டும் அன்பு மழை
    த.ம.1

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை ஐயா.

    த.ம. இரண்டாம் வாக்கு.

    ReplyDelete
  3. மழைதான் பொழியலை. அன்பு மழையாவது பொழியட்டும்ப்பா
    தம 3

    ReplyDelete
  4. அருமையான விளக்கம் அய்யா :)
    த ம 4

    ReplyDelete
  5. அன்பு ஒன்றுதான் எதையும் வெல்லும் சக்தி கொண்டது சில சமயம் அது தோற்றாலும் இறுதியில் வெல்வது அதுவே உண்மையாக இருந்தால்!!!

    நல்ல வரிகள் ஐயா...

    த ம 5 என்று நினைக்கிறோம்....

    ReplyDelete
  6. அருமை.

    ஆறாவது வாக்கு.

    ReplyDelete
  7. அன்பெனப்படுவது யாதெனின் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் ஆனாலிதுபோல்பாக்கள் மூலம் அல்ல

    ReplyDelete
  8. மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...