Monday, August 7, 2017

மன்பதை உலகில் மனிதர்கள் எவரும் உண்பதுநாழி உடுப்பது நான்கு முழம்!




மன்பதை உலகில் மனிதர்கள் எவரும்
உண்பதுநாழி உடுப்பது நான்கு முழம்
என்பதை உணர்ந்தும் ஏனோ தானோ
இன்புற உலகில் ஏற்றது அறியாது
இருப்பதை வைத்து வாழ்ந்திடப் புரியாது
துன்பம் தந்திடப் பொருள்மிகத் தேடியே
தொலைப்பது வாழ்வை! தேவையா? அந்தோ!


புலவர் சா இராமாநுசம

13 comments :

  1. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுதானய்யா இந்த பொருள் தேடல்.

    ReplyDelete
  2. உலகில் எல்லோருமே எதையோ தேடி, ஓடி ஏமாறுகிறோம் ஐயா
    த.ம.பிறகு

    ReplyDelete
  3. தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

    ReplyDelete
  4. தேடல்கள் நல்ல தேடல்கள் என்றால் தவறில்லைதான். வாழ்வும் இனிமையாகும்!..ஆனால் பெரும்பான்மையான மனிதர்களின் தேடல்கள் எல்லையற்ற ஆசைகளாகிவிடுவதால்தான் துன்பம்.....அவ்வகைத் தேடல் தேவையற்றதே...

    த. ம 5

    ReplyDelete
  5. உண்பது நெஆழி உடுப்பது நான்கு முழம் இந்தக் காலத்திலுமா

    ReplyDelete
  6. பொருளைத் தேடி வாழ்வைத் தொலைப்பவர்கள்! தம 7 ம் வாக்கு.

    ReplyDelete
  7. முடியாத தேடல்.... எதைத் தேடுகிறோம் என்று தெரியாத ஓட்டம். அது தான் இப்போது நடப்பது...

    த.ம. ஒன்பதாம் வாக்கு.

    ReplyDelete
  8. தேடல் என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல ஆக்கிவிடக் கூடாது :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...