Wednesday, October 4, 2017

தனிமை என்னை வாட்டிடவே-கற்ற தமிழாம் அன்னை மீட்டிடவே!





தனிமை என்னை வாட்டிடவே-கற்ற
   தமிழாம் அன்னை மீட்டிடவே
கனிமை மிக்கோர் கருத்துரையும்-தேனில்
   கலந்த பாலென மனதுறையும்
இனிமை மிகவே எண்ணத்தில்-என்றும்
  இதயம் புகவே வண்ணத்தில்
நனிமிக கவிதைகள் எழுதிடுவேன்-உறவை
  நாளும் பணிந்து தொழுதிடுவேன்

புலவர் சா இராமாநுசம்

18 comments :

  1. தமிழ் தனிமை போக்கட்டும்.

    முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. படித்து மகிழ்விக்க நாங்கள் இருக்கிறோம் ஐயா இயன்றவரை எழுதுங்கள்.
    த.ம.பிறகு.

    ReplyDelete
  3. கனிமை மிக்கோர் கருத்துரை இனியும் தொடரும் அய்யா :)

    ReplyDelete
  4. நனிமிக கவிதைகள் எழுதிடுவேன் - எழுதுங்கள் புலவரே. நாங்கள் படிக்கிறோம். தமிழும் உங்கள் தனிமையைப் போக்கிவிடும்.

    ReplyDelete
  5. தமிழை நம்பினோர் கைவிடப்படார்

    ReplyDelete
  6. இன்னும் கவிதைகள் எழுதுங்கோ.. எனக்கும் புரியும் பாசையில் எழுதுங்கோ.. 7ம் நம்பர் என்னோடது:)

    ReplyDelete
  7. தமிழிருக்கக் தனிமைஏது
    தம +1

    ReplyDelete
  8. நீங்கள் தனிமையில் இருந்தாலும், உங்களோடு உறவாட வலைப்பூ மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் இருக்கிறார்கள் அய்யா. எனினும் எனது ஒரு சிறு ஆலோசனை, உங்கள் கூடவே யாரேனும் ஒருவர் துணைக்கு இருப்பது நல்லது அய்யா.

    ReplyDelete
    Replies
    1. என் இளைய மகளோடுதான் இருக்கிறேன் இளங்கோ நன்றி

      Delete
  9. எழுதுங்கள்; எழுதிக்கொண்டே இருப்போம்.

    ReplyDelete
  10. தேவையற்ற எண்ணங்களிலிருந்து வலை உலகும் தமிழும் காத்து நிற்கு ம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...