Friday, January 12, 2018

முகநூல் பதிவுகள்



12-ம் தேதியே அதாவது நாளை யே விடுமுறை என்பதை முன் கூட்டியே அறிவித்திருந்தால்
ஊர் செல்ல இருக்கின்ற மக்கள் பயணச்சீட்டை அதற்கேற்ப பதிவு செய்திருப்பார்கள்!எதிலும் திட்ட மில்லாத அரசே இன்று நடைப் பெற்றுக் கொண்டடிருக்கிறது!!! என்று மக்கள் புலம்புவது
தீருமா!?

மீண்டும் பேச்சு வார்த்தைக்கு
அழைத்தால் வேலைநிறுத்தம்
இரவே திரும்பப் பெறுவோம்- ஊழியர் சங்கம் அறிவிப்பு! ஆளும் அரசு ஆவன செய்ய வேண்டும்!

ஒருவனுக்குத் தேவைக்குமேல் பணம் சேர்ந்து விட்டால்போதும், மேலும் பணத்தை அவன் தேடாமலேயே அப் பணமே நாளும் பணத்தைத்
தேடித் தரும்!

உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் ! என்பதிவைப்
படிக்கின்ற யாரும் மறுமொழியை ஆங்கிலத்திலத்தில்
போட வேண்டாம் என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன் மன்னிக்க!

பொங்கல் விழா நெருங்குகிறது
போக்கு வரத்துத்து தொழிலாளர் பிரச்சினையை விரைந்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்! மக்களின் அச்சத்தை , தவிப்பைப் போக்க இருதரப்பும் முயல வேண்டும்

உரிமைக்குக் கூட இல்லை உழைத்த உழைப்புக்கு உரிய
ஊதியமும் ஓய்வுபெற்றோர்
ஊதியமும் முறையாக வழங்கப்பட வில்லை என்றால் போராடத்தானே செய்வார்கள் அதனை
நீதி மன்றங்கள் மூலம் தடை செய்வதும் பணிநீக்கம்
செய்வோம் என்று மிரட்டுவதும் மக்களாட்சியா!!

தீதும் நன்மையும் நமக்கு பிறரால் வருவதல்ல அதற்குக் காரணம் நாமேதான்! மேலும் அதனால்
நோவதும் விடு படுவதும் அதுபோன்றதே!

நடிகர் இரஜினி அவர்கள் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு பலமான அடித்தளம் அமைக்க கால அவகாசம் கொடுத்து
முயல்வது பாராட்டத் தக்கதே அதனால்தான் முறைப்படி இன்னும் (ஏறத்தாழ) மூன்றாண்டுகள் கழித்து வரும் சட்ட மன்றத் தேர்தலில் மட்டுமே போட்டி என்று அறிவித்தார் சரி ஒருவேளை ஆளும்
ஆட்சி கலைந்து தேர்தல் முன் கூட்டியே வருமானால்
என்ன செய்வார் போட்டி!!!!! இடுவாரா?

புலவர்  சா  இராமாநுசம்

3 comments :

  1. பொங்கல் வாழ்த்துக்கள் புலவர் ஐயா.. வோட்டில டச்சுப் பண்ணிட்டுப் போறேன்ன்:)..

    ReplyDelete
  2. தமிழ்ர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  3. சிலவற்றை அங்கேயே படித்தேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...