Saturday, January 13, 2018

போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே



போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும்
புகைசூழ ஆயிற்றி மார்கழியே
ஓயாத பனிமூட்டம் மார்கழியே-அத்துடன்
ஒன்றேன கலந்திட மார்கழியே
தாயாக தைமகள் நாளைவர-இங்கே
தந்திட வேண்டினோம் ! இன்பம்தர
வாயார வாழ்த்தியே வணங்கிமிக-நாங்கள்
வரவேற்று மகிழ்வோடு பாடுகின்றோம்


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. உங்களுடன் சேர்ந்து நாங்களும் தை மகளை வரவேற்கிறோம்.​

    ReplyDelete
  2. ஆமாம் மார்கழி போயிந்தி:(..

    ReplyDelete
  3. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
    தம+1

    ReplyDelete
  5. இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...