ஆட்டுவது பா.சா க வடவர் நாடு-அதன்படி
ஆடுவது இடப்பாடி அடடா கேடு
நாட்டுநிலை காட்டலது உண்மை தானே-விரைவில்
நாடறியும் திரைவிலகும் அறிவார் தானே
ஓட்டுதனை கேட்டவரும் வருவார் ஒருநாள்-அன்றே
ஓட்டிடுவீர் !விரைட்டிடுவீர்! அதுவே திருநாள்
கேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக்
கேடுநீங்கி ஒளிபரவ அறியும் உலகும்!
புலவர் சா இராமாநுசம்

