ஓரளவு நலமுற்றேன் என்ற போதும்
ஓய்வெடுக்க இயலாது மனதில் மோதும்
பேரளவு இன்றெனினும் எழுது என்றே
பின்னிருந்து ஆசையது உந்த இன்றே
சீரளவு குறைந்ததொரு கவிதை தன்னை
செப்பிடவே உறவுகளே படித்து என்னை
நீரளவு இல்லாத அன்பைக் காட்ட
நித்தம்நான் முயல்வேனே பதிவை தீட்ட!
வணக்கம்!
புலவர் சா இராமாநுசம்

