Showing posts with label கவிதை புனைவு ஈழம் ஒற்றுமை தீர்வு. Show all posts
Showing posts with label கவிதை புனைவு ஈழம் ஒற்றுமை தீர்வு. Show all posts

Wednesday, May 2, 2012

இரத்தம் சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!


ஒலிக்கிறது தனிஈழம்  தீர்வா மென்றே-ஆனால்
   ஒற்றுமையோ வரவில்லை இதுவா நன்றே!
களிக்கிறது மனமெல்லாம் சொல்வேன் ஒன்றே-யாரும்
   கடந்ததைப் பேசாமல் சேர்வீர் இன்றே!

சொல்வது யாரெனும் ஆய்வு வேண்டாம்-அவர்
    சொற்பொருள் யாதென ஆய்த லீண்டாம்!
வெல்வது தனிஈழம் வருமே ஒருநாள்-நாம்
    வீறுகொள்ள விரைந்திடுமே அந்தத் திருநாள்!

உலகெங்கும் வாழ்கின்ற தமிழ ரினமே-உன்
   உணர்வாலே ஒன்றுபடின் ஈழம் வருமே!
கலகங்கள் நமக்குள்ளே வேண்டா மினியும்-உள்ள
    கழகங்கள் ஒன்றாயின் காலங் கனியும்!

நடந்ததை மறப்பதே நமக்குத் தேவை!-ஈழம்
   நல்கிட அனைவரும் செய்யும் சேவை!
திடமதை மனதிலே கொள்ள வேண்டும்-போர்
   திட்டத்தை அறவழி தீட்ட வேண்டும்!

ஓரணி திரண்டாலே உடனே வெல்வோம்-குரல்
   ஓங்கிட உலகுக்கு எடுத்துச் சொல்வோம்!
பேரணி ஆர்பாட்டம் ஊரில் எங்கும்-பேசும்
   பேச்சிலே மூச்சிலே ஈழம் பொங்கும்!

குற்றமே பார்ப்பார்கும் சுற்றம் இல்லை-வெறும்
    குறைசொல்லி வந்தாலே மேலும் தொல்லை!
செற்றமே நமக்குள்ளே வேண்டாம்! கெடுக்கும்-இரத்தம்
    சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!

                   புலவர் சா இராமாநுசம்


  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...