Showing posts with label கவிதை புனைவு ஈழம் வெற்றி ஆசை. Show all posts
Showing posts with label கவிதை புனைவு ஈழம் வெற்றி ஆசை. Show all posts

Saturday, May 5, 2012

ஈழம் ஒன்றே என்னாசை-என் இதயம் முழங்கும் நல்லோசை


ஈழம் ஒன்றே என்னாசை-என்
   இதயம் முழங்கும் நல்லோசை!
வாழும் என்நாள் முடிவுக்குள்-அது
   வந்திடுட வேண்டும் விடிவுக்கே!
சூழல் விரைவில் வந்திடுமா-ஈழம்
   சுதந்திரம் பெற்றுத் தந்திடுமா?
பாழும் மனமே! கலங்காதே!-சிங்கள,
   பாவியின் குலமும் விளங்காதே!

கண்டனம் செய்தால் போதாது-அந்த
   கயவர்கள் திருந்துதல் ஆகாது!
தண்டணைத் தருவதே சரியாகும்-எனில்,
   தமிழரின் வாழ்வே எரியாகும்!
சண்டை முடிந்தும் மூன்றாண்டே-அங்கே
    சாவாதே மேலென மனந்தூண்ட
குண்டர்கள் ஆடசி மாறாதே-அவர்
   கொடுமைக்கு இன்றும் அளவேதே!

முள்ளின் வேலிக்குள் கிடக்கின்றார்-அவர்
   முடங்கி அடங்கியே நடக்கின்றார்!
உள்ளிட வேண்டும் ஐ.நா வே-உடன்
   உலகம் உணர்ந்திடச் செய்வாயே!
கள்ளிப் பாலும் பசும்பாலாய்-பக்சே
   கள்ளனின் நாடகம் சிலநாளே!
வெள்ளி முளைக்கும்! விடிந்திடுமே-ஈழ
   வெற்றிச் சங்கும் ஊதிடுமே!

                                 புலவர் சா இராமாநுசம்
 

   
  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...