Showing posts with label கவிதை புனைவு மீளபதிவு. Show all posts
Showing posts with label கவிதை புனைவு மீளபதிவு. Show all posts

Wednesday, June 20, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே!

    ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப்பாவே!
    தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத்தில்!
    தானாய் வந்தது அலைபோல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலைபோல!
    வானாய் விரிந்திட சிந்தனைகள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனைகள்!  

    உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந்தாச்சே!
    எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்பூவே!
    போதை கொண்டவன் நிலையுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலைபெற்றேன்!
    பொழுதும் சாய்ந்தே போனதுவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்ததுவே!

    பாதி இரவில் எழுந்திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதிடுவேன்!
    வீதியில் ஒசைவந்தவுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்திடிமே!
    தேதி கேட்டால தெரியாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரியாதே!
    காதில் அழைப்பது விழுந்தாலும-என்
    கவன மதிலே செல்வதில்லை!

    படுத்த படியே சிந்திப்பேன்-என்
    பக்கத் தில்பேனா தாளுமே!
    தொடுக்க நெஞ்சில் இருவரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறைவில்லை!
    அடுத்த வரிகள் காணாதாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணாதாம்!
    எடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயாதாம்!

    அப்பா  வேதனை ஆப்பா-தினம்
    ஆனது என்நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப்பாவே!
    ஒப்பா யிருந்ததே என்னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனைப் பெருவெள்ளம்
    இப்பா போதும் முடியப்பா-சோர்வு
    எழவே தொடரா படியப்பா!

              புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...