Showing posts with label குழந்தைகள் தின பாடல். Show all posts
Showing posts with label குழந்தைகள் தின பாடல். Show all posts

Thursday, November 14, 2013

குழந்தைகள் தின பாடலும், என் அன்புப் பேரனும்








இளையமகள் பெற்றெடுத்த  பேரன் – கணினி
    இணையத்தை  இயக்குவதில்  சூரன்
வலைதனிலே எனக்குதவி  வருவான் –தமிழ்
    வார்தைகளை திருத்திகூட  தருவான்

அதிகாலை எழுவதுதான் தொல்லை! -ஆனால்
    அதன்பிறகு  தயக்கமது  இல்லை
புதுமாலை  போல்பொலிவு கொண்டே –பள்ளி
    போய்விட்டு திரும்புவதும் உண்டே

படியென்று  சொல்லுவது  வீணே! –அவன்
    படித்திடுவான் பாடங்களைத்  தானே
முடியென்று சொல்லுமுன் முடிப்பான்! –செயலை
    முடித்துவிட்டு  பின்பேதான் படுப்பான்

கண்ணெனவே காக்கின்றாள்! மகளே  -அந்த
    காரணத்தை நானெடுத்தே புகல
ஒண்ணெனவே பெற்றதாலே அருமை –அவன்
    ஊர்மெச்ச படிப்பதாலே  பெருமை
      

உண்ணுவதில் மட்டும்தான் தொல்லை –அதை
    உணரும்நாள் வந்திடிமா  ஒல்லை!
மண்டிவிடும் மகிழ்வாலே மேலும் –இதை
    மறவாது  நடப்பானா நாளும்

தப்பென்றால் தலைகுனிந்து  நிற்பான் -செய்த
    தப்புக்கு மன்னிப்பு  கேட்பான்
முப்பாலய் அவன்வாழ  வேண்டும் –தம்
    முன்னோரின் வழிபற்றி  யாண்டும்!

                    புலவர்  சா  இராமாநுசம்
   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...