Showing posts with label புதுக்கோட்டை பதிவர்கள் விழா சந்திப்பு சிறப்பு செப்பும் கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை பதிவர்கள் விழா சந்திப்பு சிறப்பு செப்பும் கவிதை. Show all posts

Tuesday, October 13, 2015

நல்முறையில் புதுக்கோட்டை சென்று வந்தேன்-நிகழ்வு நடந்த முறை அனத்துமே இனிக்கும் செந்தேன்!





நல்முறையில்  புதுக்கோட்டை  சென்று  வந்தேன்-நிகழ்வு
     நடந்த  முறை  அனத்துமே  இனிக்கும்   செந்தேன்!
வல்லமையே கொண்டவராம் இளையோர்  அணியே-நேரில்
      வந்தவர்கள் அறிவார்கள்  அவர்தம்   பணியே!
சொல்லரியப்  புகழ்பெற்றார் முத்து   நிலவன்-சற்றும்
     சுயநலமே ஏதுமில்லா, உழைத்த   தலைவன்!
இல்லைநிகர் இல்லையென வந்தோர்   தம்மை- தூய
     இதயமுடன் வரவேற்றார் வணங்கி  எம்மை!

நாவிற்கு, இனியசுவை நல்கும்  விருந்தே-பலரும்
      நவின்றிட்ட  சொற்பொழிவும்   நல்ல மருந்தே!
காவிற்கு அழகூட்டும்  மலர்கள்  போன்றே –மிகவும்
     கனிவுடனே பணிசெய்த  தொண்டர்  சான்றே!
பாவிற்குள் அடங்காத  பெருமை  ஆகும்- முற்றும்
      பகர்ந்திடவே! இயலாத  அருமை  ஆகும்!
நோவிற்கு ஆளாகி  இருந்த  போதும் – வருகின்ற
      நோக்கம்தான் குறியாக  மனதில்  மோதும்!

அகம்கண்டு  முகம்காணா  பலரைக்  கண்டேன்-மேலும்
        அவரோடு  உரையாடி மகிழ்வே  கொண்டேன்!
இகம்தன்னில்  பிறந்ததிட்ட  பயனைப்  பெற்றேன்-நாளும்
         இணையத்தால்  இத்தைய  உறவை உற்றேன்!
நகத்தோடு இணைந்திட்ட  சதைபோல்  இன்றே-புதுகை
     நடத்திட்ட பதிவர்விழா  குறையில்  ஒன்றே!
சுகத்தோடு   அனைவருமே  இல்லம்  சென்றார்-பன்முறை
     சொல்கின்றேன்   வணக்கமென  நன்றி !  நன்றி!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...